வட கிழக்குப் பருவ மழை-வானம் நோக்கும் விவசாயிகள்

ஐப்பசியி்ல் அடைமழை பெய்ய வேண்டும். அதாவது தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 2வது வாரம் முதல் டிசம்பர் வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு மழை இன்னும் தொடங்கவில்லை.
இந்த மழையை நம்பி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், மழை பெய்யாததால் மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரையே முழுமையாக நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அணையிலும் போதிய நீர் இல்லை. அணையின் நீர் மட்டம் 76 அடியாகவே உள்ளது. அணையிலிருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
நெற் பயிர்களுக்கு வரும் ஜனவரி இறுதி வாரம் வரை நீர் தேவைப்படும் நிலையில் இப்போதைய மேட்டூர் நீர் இருப்பைக் கொண்டு அதைப் பூர்த்தி செய்ய முடியாது.
எனவே, கர்நாடகத்திடம் பேசி கூடுதல் நீரைப் பெற்றாக வேண்டிய அவசியமான நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகம் நீர் தராவிட்டால் பருவமழை பெய்தால் மட்டுமே நெற் பயிரை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
தமிழகத்துக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய நீரில் 3 டி.எம்.சியை கர்நாடகம் பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அதன்அணைகளில் 90 சதவீதத்துக்கு மேல் நீர் இருப்பு உள்ளது.
பருவ மழை வருவதற்கான அறிகுறி!!!:
இதற்கிடையே வட கிழக்கு பருவ காற்று வீசத் தொடங்கியுள்ளதால் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரமபித்துள்ளது விவசாயிகளை கொஞ்சம் நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
கடந்த 12ம் தேதி முதல் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீச ஆரம்பித்துள்ளது. இதனால் பருவமழை விரைவில் தொடங்கும் என்றார்.
புதன்கிழமை முதல் தமிழக, கேரள கடலோர மாவட்டங்களில் இந்த மழை தொடங்கலாம் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 23ம் தேதி தொடங்கி அரைகுறையாகப் பெய்தது நினைவுகூறத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications