சேலம் பகுதியில் மர்ம காய்ச்சல்: 4 பேர் பலி, பீதி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
ஆத்தூர், பைத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேற்று மர்ம காய்ச்சலுக்கு பலியாயினர்.
அதேபோல் வாழப்பாடி அருகே பரவையில் மர்மக் காய்ச்சலுக்கு ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் 30 மருத்தவர்கள் கொண்ட குழு அங்கு விரைந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோசனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications