LPG: அமெரிக்காவால் இந்தியாவில் அடுப்பு எரிகிறது.. இல்லாட்டி ரொம்ப கஷ்டம்..!
இந்திய குடும்பங்களின் சமையலறையில் எரியும் எல்பிஜி சிலிண்டரின் பின்னால் அமெரிக்காவின் ஆதாரவு இருக்கிறது. பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பி வந்த இந்தியா, ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட சூழ்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டை சந்திக்கும் அபாயத்தில் இருந்தது.
ஆனால் மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அந்த நெருக்கடி பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சிலிண்டர் புக் செய்யப்பட்ட உடன் 2-3 நாட்களில் டெலிவரி ஆகிறது.

ஹார்முஸ் நெருக்கடி எப்படி பாதித்தது?
இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை முடப்பட்டதால், இந்தியாவுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது.
இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 90% வரை வளைகுடா நாடுகளை நம்பியிருந்தது. மாதத்திற்கு சுமார் 20 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்படும். ஆனால் ஹார்முஸ் நீரிணை முடப்பட்டதால், ஏப்ரல் மாதத்தில் இறக்குமதி 6.96 லட்சம் டன்னாக கடுமையாக சரிந்தது. இது இந்திய குடும்பங்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறியிருக்கும்.
இந்த நிலையில், இந்தியா விரைந்து மாற்று ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியது. இதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி
ஜூன் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சுமார் 11 லட்சம் முதல் 12 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இது இதுவரை இல்லாத அளவிலான அதிகப்படியான இறக்குமதி அளவாகும். மே மாதத்திலேயே அமெரிக்காவிலிருந்து 6.48 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்பட்டது.
இதே மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இறக்குமதி 3 லட்சம் முதல் 4 லட்சம் டன் வந்தடைந்துள்ளது. குவைத்திலிருந்தும் சுமார் 45,000 டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதனால் மொத்த இறக்குமதி மே மாதத்தில் 11.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கை
இந்தியா ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தக சமநிலையை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்க எல்பிஜி இறக்குமதியை மொத்த இறக்குமதியில் 10% ஆக உயர்த்த திட்டமிட்டிருந்தது. ஹார்முஸ் நெருக்கடி இந்த திட்டத்தை விரைவுபடுத்தியது. இதனால் இந்தியா விரைவாக அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் எல்பிஜி வாங்கத் தொடங்கியது.
இந்த நடவடிக்கை இந்திய வீடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் தடுத்துள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயுவை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் இந்தியா அமெரிக்கா, UAE, குவைத் மட்டும் அல்லாமல் ஈரான், ஒமான், சவுதி அரேபியா, அல்ஜீரியா, கத்தார், நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் எரிவாயு இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications