கேத்தன் தங்கச்சி அதை கேட்டதுமே திருதிருன்னு விழித்த சியா! புனே கோட்டை உச்சி கொடுமை அம்பலமானது எப்படி

Subscribe to Oneindia Tamil

மும்பை: புனே லோனாவாலா அருகே உள்ள லோகாகட் கோட்டையில், மலையேற்றத்தின்போது 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வாலின் மரணம், விபத்து அல்ல, திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது புனே ஊரகக் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர் விசாரணை நடந்து வரும்நிலையில், அது சம்பந்தப்பட்ட புது புது தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

வருங்கால கணவர் கேத்தன் அகர்வலை, ஜாலியாக மலையேறலாம் என்று சொல்லி லோகாகட் கோட்டைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. பலத்த காற்று வீசியபோது போட்டோ எடுக்க முயன்றதால் கேத்தன் தவறி விழுந்துவிட்டதாக அவரது வருங்கால மனைவி சியா கோயல் நாடகமாடினார்.

Pune Fort Case

புனே கொலை சம்பவம்

ஆனால், இந்த மரணத்தில் சந்தேகம் அடைந்த காவல் கண்காணிப்பாளர் சந்திப் கில் தலைமையிலான குழுவினர், நிதி மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்து விசாரித்தபோது, சியாவுக்கு சேத்தன் சௌத்ரி என்ற இளைஞருடன் இருந்த கள்ளத்தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.

கேத்தனை திருமணம் செய்ய விருப்பமில்லாத சியா, தங்களுக்குத் தடையாக இருந்த அவரைத் தீர்த்துக்கட்ட சேத்தனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, கோட்டையின் உச்சிக்கு வரவழைத்து பின்னால் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர்.

400 அடி மலை உச்சி

ஆனால், இந்தக் கொடூரச் செயலுக்கு முன்னதாக, ஜூன் 14-ம் தேதியே பாம்பு பயத்தைக் காட்டி கேத்தனைக் கொல்ல முயன்ற இவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. அந்தவகையில் இப்போதும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது..

அதாவது லோகாகாட் கோட்டைக்கு கடந்த மே 31, ஜுன் 14 மற்றும் 18ம் தேதிகளிலேயே கேதனை கொலை செய்ய முடிவாகி, மலையேற்றத்துக்கு அழைத்து சென்றாராம் சியா.. இதில், ஜுன் 14ம் தேதியே கேதனை பள்ளத்தில் தள்ளிவிடவும் முயன்றார். ஆனால், அருகில் உள்ள புதரைப் பிடித்து கேத்தன் தப்பித்து விட்டார்.

பிறகு 3வது முறையாகத்தான், கடந்த 18ம் தேதியும் தனது காதலனை பின் தொடர்ந்து வரச் செய்து, கேத்தனை பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர். மலை உச்சியில் போட்டோ எடுக்க முயன்றபோது, கேதன் தவறி விழுந்ததாக சியா சொன்னதால், இது தற்செயல் விபத்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கேதன் மறைவுக்கு அஞ்சலி

ஆனால் மனசாட்சியே இல்லாமல், கேதன் இறந்ததற்கு தன்னுடைய இன்ஸ்டாவில் அஞ்சலி பதிவு போட்டார் சியா.. அதுமட்டுமல்ல, கேதன் இறந்த 4 நாள் கழித்துதான் அவரது வீட்டுக்கே இரங்கல் தெரிவிக்க சியா சென்றாராம்.

அப்போது கேதன் எப்படி பள்ளத்தில் விழுந்தார் என அவரது சகோதரி சியாவிடம் நிறைய கேள்விகளை கேட்டுள்ளார்.. இந்த கேள்விகளை சியா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.. எனினும் திக்கித் திணறி பதில்களை சொல்லி உள்ளார்.. ஆனால், அந்த பதில்கள் அனைத்துமே முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், கேதன் சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

கேதன் சகோதரியால் சிக்கிய சியா

இந்த சந்தேகத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் சொல்லவும், அவர்கள் கள் போலீஸாரிடம் கேதன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு பிறகுதான் போலீஸார் வேறு கோணத்தில் தங்கள் விசாரணையை தொடங்கினர். சியாவையும் விசாரணை வளைத்துக்குள் கொண்டுவந்தனர்.

சியாவுக்கு சேத்தன் என்பவருடன் தொடர்பு இருந்தது தெரியவர அவர்களது போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதில் இந்த 6 மாதத்தில் மட்டும் 2 பேரும் வரும் 2,004 முறை மொத்தம் 238 மணி நேரம் பேசியது அம்பலமாகி உள்ளது.. கொலைக்கு உடந்தையாக இருந்தது ஷியாவின் காதலன் சேத்தன் என்பதும் உறுதி செய்யப்பட்

ஆனால், கேதனின் சகோதரிக்கு மட்டும் சியா மீது சந்தேகம் எழவில்லை என்றால், இந்த திட்டமிட்ட கொலை சம்பவம், தற்செயல் விபத்தாகவே முடிந்திருக்கும் என்கிறார்கள்.. இப்போதைக்கு சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த கொடூரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் மேலதிக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+