எஸ்எல்ஆர் விகிதம் 25% உயர்வு!
மும்பை: ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கையின்படி எஸ்எல்ஆர் எனப்படும் கட்டாய ரொக்க இருப்பு விகிதம் (statutory liquidity ratio) 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது 24 சதவீதத்திலிருந்து 25 சதவீகிதமாக, 100 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்எல்ஆர் விகிதம் என்பது ஒவ்வொரு வங்கியும் தங்களது வைப்புத் தொகையில் ஒரு பகுதியை அரசின் கடன் பத்திரங்களில் கட்டாயமாகச் செய்யும் முதலீடாகும். இதன் மூலம் வெளிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள உபரி பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி விட முடியும். நாட்டில் அனாவசிய பணப்புழக்கம் குறையும்.
இந்த முறை 1 சதவிகிதம் எஸ்எல்ஆர் உயர்த்தப்பட்டதால், வெளிச் சந்தையில் உள்ள ரூ. 35,000 கோடி ரிசர்வ் வங்கிக்கே திருப்பப்படும். இதனால் சந்தையில் கூடுதலாக உள்ள பணம் உரிஞ்சப்படும். லேசாக உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
சிஆர்ஆர், ரெபோ ரேட், ரிவர்ஸ் ரேட்டில் மாறுதல் இல்லை:
அதே நேரத்தில் ரிசவ் வங்கியின் முக்கிய பணவியல் ஆயுதங்களான ரொக்க இருப்பு விகிதம், சிஆர்ஆர், ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட் போன்றவற்றில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளது.
இப்போதைய விகிதங்கள்: சிஆர்ஆர் - 5 சதவீதம், ரெபோ ரேட் (வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி) 4.75 சதவீதம், ரிவர்ஸ் ரேட் (வங்கி அமைப்பில் உள்ள உபரி நிதியை உள்ளிழுக்க ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான விகிதம்) 3.25 சதவீதம்.
மேலும், இந்த ஆண்டுக்கான பணவீக்க இலக்கை 5 சதவீதம் என்பதிலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications