எஸ்எல்ஆர் விகிதம் 25% உயர்வு!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கையின்படி எஸ்எல்ஆர் எனப்படும் கட்டாய ரொக்க இருப்பு விகிதம் (statutory liquidity ratio) 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 24 சதவீதத்திலிருந்து 25 சதவீகிதமாக, 100 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்எல்ஆர் விகிதம் என்பது ஒவ்வொரு வங்கியும் தங்களது வைப்புத் தொகையில் ஒரு பகுதியை அரசின் கடன் பத்திரங்களில் கட்டாயமாகச் செய்யும் முதலீடாகும். இதன் மூலம் வெளிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள உபரி பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி விட முடியும். நாட்டில் அனாவசிய பணப்புழக்கம் குறையும்.

இந்த முறை 1 சதவிகிதம் எஸ்எல்ஆர் உயர்த்தப்பட்டதால், வெளிச் சந்தையில் உள்ள ரூ. 35,000 கோடி ரிசர்வ் வங்கிக்கே திருப்பப்படும். இதனால் சந்தையில் கூடுதலாக உள்ள பணம் உரிஞ்சப்படும். லேசாக உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.

சிஆர்ஆர், ரெபோ ரேட், ரிவர்ஸ் ரேட்டில் மாறுதல் இல்லை:

அதே நேரத்தில் ரிசவ் வங்கியின் முக்கிய பணவியல் ஆயுதங்களான ரொக்க இருப்பு விகிதம், சிஆர்ஆர், ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட் போன்றவற்றில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளது.

இப்போதைய விகிதங்கள்: சிஆர்ஆர் - 5 சதவீதம், ரெபோ ரேட் (வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி) 4.75 சதவீதம், ரிவர்ஸ் ரேட் (வங்கி அமைப்பில் உள்ள உபரி நிதியை உள்ளிழுக்க ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கான விகிதம்) 3.25 சதவீதம்.

மேலும், இந்த ஆண்டுக்கான பணவீக்க இலக்கை 5 சதவீதம் என்பதிலிருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+