வங்கதேசம்: இந்திய தூதருக்கு கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதர் பினக் ரஞ்சன் சக்ரவர்த்திக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28ம் தேதி சக்ரவர்த்திக்கு ஒரு இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து இந்தியத் தூதரகம், தூதர், தூதரக அதிகாரிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சக்ரவர்த்தியிடம் கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசக் கூடாது. இது இந்திய அரசின் கொள்கை என்று மட்டும் அவர் கூறினார்.
இந்த கொலை மிரட்டலை அல் கொய்தா அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் பங்களாதேஷ் (ஹூஜி) ஆகிய இரு அமைப்புகளில் ஒன்று அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications