அண்டர்வேர்ல்டு முதலீட்டாளர்களை இந்தியாவால் பிடிக்க முடியாதது ஏன்?

ராஜ் ராஜ்ரத்னம் சர்வ பலம் மிக்க ஒரு செல்வந்தராகத் திகழ்ந்தவர். இலங்கையின் பங்குச் சந்தையையே தனது கட்டுக்குள் வைத்திருந்தவர்.
இன்டெல், ஐ.பி.எம், மெக்கின்ஸி ஆகிய பெரும்புகழ் கொண்ட நிறுவன பங்குகளை சுமார் 20 மில்லியன் டாலர்கள் வரையில் (சுமார் 92 கோடி ரூபாய்), 'இன்ஸைடர் டிரேடிங்' முறையில் வாங்கி 100 மில்லியன் டாலர்கள் வரை தவறாக பங்குச் சந்தையில் லாபம் பார்த்தார் ராஜ்ரத்னம் என்று எஃப்.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் கூறியுள்ளது.
அது என்ன இன்ஸைடர் டிரேடிங்?:
குறிப்பிட்ட நிறுவனத்தின் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு, நிறுவனத்தின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப அந்த நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வாங்கி, விலையேறியதும் விற்று பெரும் லாபம் பார்ப்பதுதான் இன்ஸைடர் டிரேடிங்.
இலங்கையின் பெருமளவு நிறுவனங்களின் பங்குகளை இப்படி ராஜ் ரத்தினம் வளைத்து பின்னர் நல்ல லாபத்துக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.
இவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு விடுதலைப் புலிகளுக்கு இவர் நிதியுதவி அளித்தார் என்பதுதான். ஆனால் இவர் நேரடியாக எந்த பண உதவியும் புலிகளுக்கு அளிக்கவில்லை. மாறாக டிஆர்ஓ எனப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்குதான் வேறு பெயரில் நன்கொடை வழங்கினார்.
மற்றபடி ராஜ் ராஜரத்னம் மீது வேறு மோசமான குற்றச்சாட்டுகள் ஏதுமில்லை. தமிழ் ஆர்வலர் என்ற வகையில் தமிழர் அமைப்புகளுக்கு உதவியதாக அவர் தரப்பில் கூறப்படுகிறது.
இருந்தாலும், இலங்கை அரசின் நெருக்குதலுக்கு பணிந்து அல்லது அவர்களுக்கு உதவும் நோக்கில் ராஜ் ரத்னம் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜ் ரத்தினமாவது ஒரு பெரும் தொழிலதிபர். பல நிறுவனங்களை நடத்துபவர். தமிழுணர்வாளர் என்ற வகையில் தமிழ் அமைப்புகளுக்கு உதவி செய்தவர். இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளுக்கும் கூட பல வழிகளில் உதவியிருக்கிறார்.
ஆனால், இந்தியாவில் பல தீவிரவாத வன்முறை வெறியாட்டங்களுக்கு வெளிப்படையாகவே நிதி உதவி செய்த தாவூத் இப்ராகிம் போன்றவர்களை இந்திய அரசால் நெருங்கக் கூட முடியவில்லை. சர்வதேச நெருக்குதலை தீவிரப்படுத்தி அவர்களைக் கைது செய்வதல்லாம் இந்தியாவால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சமாச்சாரமாகவே உள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் இன்ஸைடர் டிரேடிங் என்பது ரொம்ப சர்வசாதாரணமாக நடப்பதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு சக்திகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் கையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால்தான் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தீவிரவாத சக்திகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல... அதைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் இல்லாமல் போவதும் இந்தியர்களுக்குப் புதிதல்ல.












Click it and Unblock the Notifications