நோபல் வென்ற வெங்கட்ராமனுக்கு பிரதீபா பாட்டீல் வாழ்த்து
லண்டன்: லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் நோபல் பரிசு பெற்ற, இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வெகுவாகப் பாராட்டினார்.
இங்கிலாந்து சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு லண்டனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.
அனைவரின் கவனமும் அவர் மீதே இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், வெங்கட்ராமனை வெகுவாகப் பாராட்டினார்.
லண்டன் மரியாட் ஹோட்டலில் நடந்த இந்த கண்கவர் நிகழ்ச்சியில், 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பிரதீபா பாட்டீல் பேசுகையில், டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது என்பதை அறிந்து இந்தியாவில் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். அவர் இன்று நம்முடன் இருக்கிறார்.
உங்கள் அனைவருடனும் சேர்ந்து நான் அவரை வாழ்த்துகிறேன். அவரது சாதனை மகத்தானது என்றார் பாட்டீல். இதையடுத்து அரங்கில் இருந்த அனைவரும் கரவொலி எழுப்பி வெங்கட்ராமனை வாழ்த்தினர்.
பின்னர் வெங்கட்ராமன் பேசுகையில், குடியரசுத் தலைவர் எனது பெயரைக் குறிப்பிட்டு பாராட்டியது என்னை நெகிழ வைத்துள்ளது.
நான் வாங்கிய இந்தப் பரிசு இந்தியாவுக்கு மிகப் பெரியது. தற்போது நான் பணியாற்றி வரும் ஆய்வகத்திற்கு கிடைத்துள்ள 15வது நோபல் பரிசு இது என்றார்.












Click it and Unblock the Notifications