அமிதாப் நில மாற்றம் தவறாக நடந்து விட்டதாம்!
லக்னோ: அமிதாப் பச்சனின் நில மாற்றம் தொடர்பாக சிறு தவறு நடந்து விட்டது. இதுவே தற்போது மீண்டும் சர்ச்சை ஏற்படக் காரணமாகி விட்டது என்று விளக்கியுள்ளார் அமிதாப் பச்சனின் முன்னாள் பிரதிநிதியான வினய் சுக்லா.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் நடந்தது என்னவென்றால், அந்த நிலத்தை கிராம சபைக்குத்தான் கொடுப்பதாக இருந்தது. ஆனால் தவறுதலாக நிஷ்தா பவுண்டேஷனுக்கான (ஜெயப்பிரதாவுடையது) நன்கொடைப் பத்திரத்தில் இந்த நிலத்தின் பெயரும் இடம் பெற்று விட்டது.
இந்தத் தவறு தெரிய வந்தவுடன், அமிதாப் பச்சனின் கோரிக்கைப்படி, நிஷ்தா பவுண்டேஷன் அந்த நிலத்தை கிராம சபைக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டிருந்தது.
ஆனால் அதற்குள், தெளலத்பூர் கிராம சபைத் தலைவி ராஜ்குமாரி சிங்கின் மகன் அவினேந்திர சிங், போலீஸில் புகார் கொடுத்து விட்டார் என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஐந்து பேர் கொண்ட கமிட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் அமைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications