தோழி கழுத்தை நெரித்துக் கொள்ளையடிக்க முயன்று கைதான பெண்ணுக்கு பிரசவம்
சென்னை: தோழியின் கழுத்தை கொடூரமாக நெரித்துக் கொலை செய்ய முயன்று, நகைகளை கொள்ளையடித்துக் கைதாகிய நிறைமாத கர்ப்பிணிக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
திருவேற்காட்டைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்தரசி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சீமந்தத்துக்காக வந்திருந்தார்.
இவரது நெருங்கிய தோழி சுபஸ்ரீ (28). இவர் ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில் சீமந்தச் செலவுக்குப் பணம் கேட்பதற்காக தனது கணவர் சரவணன், அவரது நண்பர்கள் ஆனந்த், வினோத் ஆகியோருடன் முத்தரசி, சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்றார்.
கர்ப்பிணித் தோழியை வரவேற்று, டீ போட்டுக் கொடுத்து பாசத்துடன் பேசிக் கொண்டிருந்தார் சுபஸ்ரீ. அப்போது தனது சீமந்தச் செலவுக்குப் பணம் கேட்டுள்ளார் முத்தரசி. ஆனால் தன்னிடம் இல்லை என்று சுபஸ்ரீ கூறவே, திடீரென சுபஸ்ரீயை பிடித்து கீழே தள்ளிய முத்தரசி அவரது கழுத்தை நெரித்தார். பின்னர் சுபஸ்ரீயின் மார்பில் ஏறி நின்று கழுத்தில் ஓங்கி மிதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் சுபஸ்ரீ மயங்கி விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி, 35 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த முத்தரசி தனது கணவர் சரவணன் மற்றும் அவரது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சுபஸ்ரீ அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இன்னும் பேச்சு வரவில்லை. இந்த நிலையில் சுபஸ்ரீயும், சரவணனின் இரு கூட்டாளிகளும் சிக்கினர். சரவணன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
சுபஸ்ரீ கர்ப்பிணி என்பதால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் சேர்க்கப்பட்டார்.
போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையுடன் முத்தரசி புழல் சிறைக்குக் கொண்டு போகப்பட்டார்.












Click it and Unblock the Notifications