இந்திரா காந்தியின் 25வது நினைவு தினம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 25வது நினைவு தினத்தையோட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல்காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நினைவுதினத்தையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டு பேரணி, ரத்த தான முகாம்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
காலை 9.20 மணியளவில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் தெட்ண்டர்கள் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.
சத்தியமூர்த்தி பவனில் இந்திராவின் உருவப் படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை யானை கவுனியில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு தங்கபாலு தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications