For Daily Alerts
Just In
ஜப்பான்-இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
ஜகார்தா: இந்தேனேஷியாவின் சுலவேசி பகுதியி்ல் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந் நாட்டு நேரப்படி காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 புள்ளிகளாகப் பதிவானது.
இப் பகுதியி்ல் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை பலியானது நினைவுகூறத்தக்கது.
ஜப்பானிலும்
இதற்கிடையே நேற்று மாலை 4.20 மணியளவில் ஜப்பானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமாமி ஒஷிமா கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 புள்ளிகளாகப் பதிவானது. கடலுக்கடியில் 45 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏற்படலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
Comments
japan ஜப்பான் பலி சுனாமி பூகம்பம் நிலநடுக்கம் பீதி law இந்தோனேஷியா earthquake richter scale metro train
Story first published: Saturday, October 31, 2009, 10:02 [IST]