யு.எஸ்.சில் இந்தியா -பாக். கிரிக்கெட்: தரூர் யோசனை
கொல்கத்தா: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்கா போன்ற நடுநிலை மைதானங்களில் நடித்த முயற்சிக்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். எனவே இங்கு இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம்.
அமெரிக்காவில் இந்தியர்களும் சரி, பாகிஸ்தானியர்களும் சரி நிறையவே உள்ளனர். அருமையான கிரிக்கெட் சூழல் அங்கு உள்ளது. எனவே தீவிரவாதத் தாக்குதல்களால் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்க, அமெரிக்காவில் இந்த நாடுகளின் போட்டிகளை நடத்தலாம்.
அமெரிக்காவில் உள்ள பேஸ்பால் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தினால் வித்தியாசமாக இருக்கும். கிரிக்கெட் தரத்துக்கு சற்று குறைவான தரத்துடன் அவை இருந்தாலும் கூட வித்தியாசமான போட்டியை ரசிகர்கள் காண முடியும் என்றார் தரூர்.
சசி தரூர் அமெரிக்காவில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications