For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவருடன் சினிமாவுக்கு சென்ற இளம்பெண் கடத்தல்

Google Oneindia Tamil News

நெல்லை: கணவருடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்த புதுப்பெண் மாயமானார். அவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மானூர் அருகேயுள்ள வேப்பங்குளத்தை சேர்ந்த பரமசிவன் மகன் வேல்முருகன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு திருமணமாகி 6 நாட்கள் ஆகிறது.

நேற்று காலை புதுமண தம்பதியினர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சரோஜா பாத்ரூம் சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.

வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து வேல்முருகன் அவரை பல இடங்களில் தேடினார். எங்கு சென்றார், எப்படி மாயமானார் என தெரியவில்லை. யாரோ அவரை கடத்தி சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வேல்முருகன் பாளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குருநாதன் விசாரணை நடத்தி புதுபபெண் சரோஜாவை தேடி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X