For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டோங்கா அருகே மீண்டும் நிலநடுக்கம்-பாதிப்பில்லை

Google Oneindia Tamil News

நுகு அலோபா: வடக்கு டோங்கா அருகே இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு டோங்கா அருகே இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது.

வவாவு தீவின் வடக்கே இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து வாரங்களுக்கு முன்பு வடக்கு டோங்காவில் உள்ள நியூடாபுடபு தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, சமோவா மற்றும் அமெரிக்க சமோவா தீவுகளிலும் சுனாமி தாக்கியதில் 170 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X