தமிழகத்தில் மேக மூட்டம்-கடலோரங்களில் மழை!
Subscribe to Oneindia Tamil

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது.
அதிகபட்சமாக சென்னை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், உள் மாவட்டங்களிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications