For Daily Alerts
Just In
தமிழகத்தில் மேக மூட்டம்-கடலோரங்களில் மழை!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது.
அதிகபட்சமாக சென்னை, கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும், உத்திரமேரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், உள் மாவட்டங்களிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Tuesday, November 3, 2009, 14:30 [IST]