தமிழக மாலுமியை மீட்க சோமாலியா கடற் கொள்ளையர்களுடன் பேச்சு
தூத்துக்குடி: சோமாலியா கடற் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இந்திய கப்பலை மீட்க இடைத் தரகர்கள் மூலம் கொள்ளையர்களுடன் கப்பல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மும்பையை சேர்ந்த அல்-காலித் என்ற சரக்கு கப்பல் கடந்த 21ம் தேதி இந்திய மாலுமிகள் உள்பட 24 பேருடன் இந்திய பெருங்கடலில் சென்று கொண்டிருந்தபோது சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட 24 பேரில் தூத்துக்குடியை சேர்ந்த விஜய கணேசும் ஒருவர். கடந்த 14 நாட்களாக கடத்தப்பட்ட கப்பலில் இருந்து எவ்வித தகவலும் கிடைக்காததால் கப்பல் மாலுமிகளது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை சோமாலியா கடற் கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள கப்பலின் கேப்டன் ஸ்நேகல் மும்பையில் உள்ள கப்பல் நிறுவன இயக்குனருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது கப்பலில் மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையான உணவு மற்று் தண்ணீர் இருப்பதாகவும், கடற் கொள்ளையர்கள் தங்களை துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை கப்பல் நிறுவனம் தங்களது குடும்பங்களுக்கு தெரிவித்துள்ளதுடன் இந்திய மாலுமிகள் 245 பேரையும் மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலுமிகளை மீட்பதற்கான முயற்சியில் அகில இந்திய கப்பல மாலுமிகள் சங்கமும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இச்சங்கத்தின் உதவிச் செயலாளரான எல்.பி.விமல்சன் மும்பையிலிருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்து விஜய் கணேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் மாலுமிகளை மீட்கும் நடவடிக்கை குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கப்பலின் தொலை தொடர்புகளை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடந்த 10 நாட்களாக துண்டிதிருந்ததால் கப்பல் மாலுமிகள் நிலை குறித்து எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தது.
நேற்று முன்தினம் கப்பல் கேப்டன் நிறுவனத்துடன் பேசியுள்ளார். பிடியிலுள்ள மாலுமிகளை மீட்க இடைத்தரகர்கள் மூலம் அந்த கப்பல் நிறுவனம் கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவகாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
"5 வருஷம் எங்க போனீங்கன்னு யாரும் கேக்கல".. தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி பேச்சு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ












Click it and Unblock the Notifications