அரசு ஊழியர் குடும்பத்தை மிரட்டிய லாலு மச்சான் உள்ளிட்டோர் மீது வழக்கு
பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மைத்துனர் சுபாஷ் யாதவ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுபாஷ் யாதவ் ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாஷ் யாதவ் உள்ளிட்டோர் மீது பீகார் சட்டமேலவையில் கிளர்க் ஆக இருக்கும் மனோஜ் யாதவ் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனது மனைவி சுபாஷ் யாதவ் வீட்டில் வேலை பார்த்து வந்தார். நவம்பர் 3ம் தேதி முதல் அவர் வேலையை விட்டு நின்று விட்டார்.
இதையடுத்து சுபாஷ் யாதவும், மற்றவர்களும் என்னையும், எனது குடும்பத்தினரையும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்று கூறி மிரட்டினர் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் புகாருக்கான முகாந்திரம் இருப்பதை அறிந்து சுபாஷ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.
விரைவில் சுபாஷ் யாதவைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications