டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி நாளை அதிமுக உண்ணாவிரதம்
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கக் கோரி நாளை அதிமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் என கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனம் டாஸ்மாக் நிறுவனம். அரசுக்கு இந்த அளவுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உதவியாளர்கள் ஆகியோரின் வருமானமோ வாழ்க்கை நடத்துவதற்கே வழியில்லாத அளவிற்கு இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், விற்பனை தொகை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குதல், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எந்தவித பணிப்பாதுகாப்பும் இன்றி 6 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலை வாசி உயர்ந்துள்ள நிலையில், அவர்களுடைய தொகுப்பு ஊதியத்தை மிகக்குறைந்த அளவுக்கு உயர்த்துவதில் எந்தவித நியாயமும் இல்லை. ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும்போது அந்த நிறுவனத்தின் லாபம், ஊழியர்களின் உழைப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளான பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணிய மர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், 7-ந்தேதி, சனிக்கிழமை சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் தொழிலாளர்கள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்தப் போராட்டம், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் சின்னசாமி, எம்.எல்.ஏ., தலைமையிலும், வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் சேகர் பாபு, எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் கலைராஜன், எம்.எல்.ஏ., சிவில் சப்ளைஸ் -டாஸ்மாக் மற்றும் அரசு சார்பு தன்னாட்சி நிறுவனங்கள் பிரிவு மாநிலச் செயலாளர் சூரியஆச்சாரி, வட சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ராஜா மற்றும் தென்சென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கழக தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தொடங்கி வைக்க, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., முடித்து வைப்பார் என்று தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications