தாக்குதல் வழக்கு - என்.கே.கே.பி. ராஜாவுக்கு முன்ஜாமீன்
ஈரோடு: பெருந்துறையைச் சேர்ந்த சிவபாலனைத் தாக்கிய வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஈரோடு கோர்ட் இன்று முன்ஜாமீன் அளித்தது.
சிவபாலனை தனது வீட்டுக்கு வரவழைத்து ஆட்களை வைத்துத் தாக்கியதாக சிவபாலன் போலீஸில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக காவல்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜாவும், அவரது 2வது மனைவி உமா மகேஸ்வரியும் தலைமறைவானார்கள். மேலும், முன் ஜாமீன் கோரி ஈரோடு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இன்று இந்த மனுவை விசாரித்த கோர்ட், நிபந்தனை முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
அதன்படி பெருந்துறை கோர்ட்டில் ராஜா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். போலீஸில் தனது துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும். மேலும் ராமநாதபுரம் தங்கியிருந்து அங்குள்ள கோர்ட்டில் தினசரி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications