நிறுத்தப்பட்ட புதினம் இணையதளம் புதிய பெயரில் தொடக்கம்
சென்னை: சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
இது தமிழீழச் செய்திகளை அதிகம் படிக்கும் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து, 'புதினம் முடக்கப்பட்டது ஏன்?' என்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதினம் தளம் அதே லோகோவுடன், ஆனால் புதினம் நியூஸ் என்ற புதிய பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.