எஸ்.எஸ்.சந்திரன் முன் ஜாமீன்-மீண்டும் தள்ளுபடி
தூத்துக்குடி: முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்எஸ்சந்திரன், அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோரது முன் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருச்செந்தூரில் கடந்த 21ம் தேதி அதிமுக பொது கூட்டம் நடந்தது. இதில் நடிகர் எஸ்எஸ் சந்திரன் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பற்றி பேசினார்.
இதையடுத்து நகர திமுக செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்எஸ் சந்திரன், மாவட்ட அதி்முக செயலாளர் சண்முகநாதன், ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுககளை கடந்த இரண்டாம் தேதி அமர்வு நீதிபதி ஆவாடி தியாகராஜ மூர்த்தி விசாரித்து தள்ளுபடி செய்தார்.
இருவரும் அன்றே மீண்டும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பு வக்கீல் ஜெபராஜன், ஜாமீன் வழங்க ஆட்பேசம் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் முன் ஜாமீன் மனுக்களையும் நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications