For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலையில் சிக்கிய உ.பி மாணவர் உடல் கடலூரில் கரை ஒதுங்கியது

Google Oneindia Tamil News

கடலூர்: புதுச்சேரி கடலில் குளித்தபோது மாயமான உ.பி மாணவரின் உடல் கடலூர் அருகே கரை ஒதுங்கியது.

உத்தரபிரதேச மாநிலம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சிங். இவரது மகன் சரண்சிங் (22). இவர் தர்மபுரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, இவர்கள் புதுச்சேரி அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடலில் குளித்தனர்.

இதில், சரண்சிங், அவரது நண்பர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிவேஷ் சவுகான் ஆகியோர் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், மீனவர்கள் உதவியுடன் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கடலூர் அடுத்த தாழங்குடா கடற்கரையில் சரண்சிங் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த சரண் சிங்கின் நண்பர்கள் தாழங்குடாவிற்கு வந்து உடலை பெற்றுச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X