ஏர் இந்தியா: நிரந்தரமாக்கப்படும் தற்காலிக ஊழியர்கள்
சென்னை: ஏர் இந்தியா நிறுவனம் ரூ. 5,548.26 கோடியை வரி செலுத்துவதற்கு முந்தைய நஷ்டமாக அடைந்துள்ளது.
ஆனாலும் அதன் தற்காலிக பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை அறிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்விந்த ஜாதவ்.
500-க்கும் மேற்பட்ட இந்த தற்காலிகப் பணியாளர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என அரவிந்த் ஜாதவ் அறிவித்துள்ளதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.
ஏர் இந்தியாவின் கேட்டரிங் பிரிவு, சுமைகளைக் கையாளும் பிரிவு, விமான நிலையத்துக்குள் வாகன ஓட்டுபவர்கள் என பல பிரிவுகளில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வயது 42 முதல் 52க்குள் இருக்கும்.
இவர்களுக்கு ஆண்டுக்கு 90 நாட்களுக்கு மட்டுமே தொடர்ச்சியான பணி வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.190 மட்டும்தான் ஊதியம். பணி நிரந்தரமாகிவிடும் என இவர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கப்பட்டதால், வேறு வேலைக்கும் போகாமல் இதிலேயே காத்திருக்கிறார்களாம்.
ஆனால், இப்போது விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க ஏர் இந்தியா முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்த தற்காலிகப் பணியாளர்களுக்குதான் முதல் பாதிப்பு என்பதால் எனவே இவர்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் பாட்டாளி யூனியனைச் சேர்ந்த சிலர் நேற்று அரவிந்த் ஜாதவைச் சந்தித்து தங்கள் பணி நிரந்தரக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அடுத்த இரண்டு மாதங்களில் சாதகமான பதிலைச் சொல்வதாக இந்தப் பணியாளர்களுக்கு உறுதி அளித்துள்ளாராம் அரவிந்த் ஜாதவ்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications