5 நாளாக போர்வெல் குழியில் தவிக்கும் சிறுவன்
ஜெய்ப்பூர்: போர்வெல் கிணற்றில் விழுந்த ஜெய்ப்பூர் சிறுவன் ஐந்து நாட்களாகியும் இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறான். இன்று மாலைக்குள் சிறுவனை வெளியில் கொண்டு வந்து விடுவோம் என போலீஸார் கூறுகின்றனர்.
ஜெய்ப்பூர் அருகே உள்ள ஜகத்புரா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் ஷாஹில். இவன் தனது வீட்டுக்கு முன்பு சகோதரியோடு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 250 அடி ஆழமான போர்வெல் கிணற்றில் விழுந்து விட்டான்.
நவம்பர் 9ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. சிறுவன் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் ஜகத்புராவுக்கு விரைந்தனர். சிறுவன் விழுந்த இடத்திற்கு அருகே பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் சிறுவன் மயக்க நிலையை 2 நாட்களுக்கு முன்பு அடைந்தான். இருப்பினும் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்று முதல் மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் கடின நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். இதுவரை 110 அடி ஆழத்திற்கு பக்கவாட்டுக் குழி தோண்டப்பட்டுள்ளது. இன்று மழை பெய்யாமல் இருந்தால் இன்று மாலைக்குள் சிறுவனை மீட்டு விடுவோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications