தாய்-மகன் கொலை வழக்கு- நீதிமன்றம் கடும் கண்டனம்; போலீஸ் மீண்டும் விசாரணை

மேலும், தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று கூறப்படுவதை ஆதாரப்பூர்வமாக போலீஸ் தரப்பு மறுக்காதையும் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சென்னை அசோக் நகரில் வசித்து வந்த அனந்தலட்சுமி, மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மருந்துக் கம்பெனியின் பிரதிநிதி, கேரளப் பெண் தான்யா உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர்.
வழக்கு முடிவுக்கு வந்ததாக அனைவரும் கருதிய நிலையில் திடீர் திருப்பமாக தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த வரதராஜுலு என்பவர் புதிய வீடியோ ஒன்றை பத்திரிகை மூலம் வெளியிட்டார்.
அதில், கைது செய்யப்பட்டுள்ள யாருமே உண்மைக் குற்றவாளிகள் இல்லை. உண்மையான குற்றவாளி இவர்கள் கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும், வேறு சிலரை குற்றவாளியாகவும் அதில் சித்தரித்திருந்தார் வரதராஜுலு.
இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது தவறு என்று கூறிய அவர்கள் அவசரம் அவசரமாக வரதராஜுலு மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரைப் பிடித்து உள்ளே தள்ளவும் முயற்சிகள் நடந்தன
இதையடுத்து வரதராஜுலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி சுதந்திரம், வரதராஜுலுவுக்கு முன்ஜாமீன் வழங்கி/lse'g இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் நடந்து கொண்ட விதம் குறித்தும் கண்டனம் தெரிவித்தார்.
நீதிபதி கூறுகையில், கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை நிரூபிப்பது புலனாய்வு அதிகாரியின் கடமையாகும். இதனை செய்ய போலீசார் தவறி விட்டனர்.
வீடியோவில் ஒருவர் அளித்த வாக்குமூலம் சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது. எனவே உண்மை வெளிவர சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு மறுபடியும் விசாரிக்கப்படவுள்ளது. கோர்ட்டின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதால், விரைவில் உதவி ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியை நியமித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications