தீவிரவாதம்-இங்கிலாந்தில் 4 பேர் கைது-வாலிபருக்கு ஜெர்மனி வலை
பெர்லின& லண்டன்: அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு அந் நாட்டு போலீசார் வலை வீசியுள்ளனர்.
ஜெர்மனியை பூர்வீககக் கொண்ட கஜாகிஸ்தானில் பிறந்த ஜேன் ஸ்செனிடர் என்ற ஹம்சா என்ற இந்த வாலிபர் பலமுறை ஆப்கானிஸ்தான் சென்று வந்துள்ளார்.
இவர் ஜெர்மனியில் தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாக அந் நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள இவரைப் பிடிக்க ஜெர்மன் போலீசார் வலை வீசியுள்ளார்.
2004ம் ஆண்டு அரபி படிக்க சவுதி அரேபியாவுக்குச் சென்ற இவர் பலமுறை ஜெர்மனிக்கு வந்து சென்று கொண்டிருந்தார். ஆனால், இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தலைமறைவாகிவிட்டார்.
இவர் போலி பாஸ்போர்ட்டில் வேறு நாட்டு்க்குச் சென்றுவிட்டாரா அல்லது ஜெர்மனியில் பதுங்கியுள்ளார் என்று தெரியவில்லை.
பிரிட்டனில் 4 பேர் கைது:
இந் நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மான்செஸ்டர், போல்டன் ஆகிய நகர்களில் 4 பேரை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
3 இடங்களில் நடந்த ரெய்டில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விவரத்தை இங்கிலாந்து அரசு வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications