சிலர் சூழ்ச்சியால் வன்னியர்களுக்கு தாழ்வு-ராமதாஸ்
காஞ்சிபுரம்: சிலரது சூழ்ச்சியால் வன்னியராகிய நாம் தாழ்வு நிலைக்கு சென்றுள்ளோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனிக் கூட்டணியாக உலா வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மீ்ண்டும் வன்னியர் கோஷத்தைக் கையில் எடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
வன்னியர் ஜாதி முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக, வன்னிய சங்கம் ஏற்படுத்தப்பட்டது. சிலரது சூழ்ச்சி தந்திரம் காரணமாக நம்மை கீழே தள்ளியுள்ளனர்.
எல்லாருக்கும் ஜாதி ஏக்கம் இருக்கத்தான் செய்கின்றது. இது இல்லாதவர் எவரும் இல்லை என்று கூறலாம்.
நாட்டில் பொருளாதார ரீதியாக பணக்காரன், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை என ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இதில், ஒடுக்கப்பட்டு திட்டமிட்டு ஏமாற்றப்பட்டவர்கள் தான் வன்னியர்கள். வாழ்விழந்த ஜாதி, ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஜாதி என்று கூட கூறலாம்.
முன்பு, 1980 ம் ஆண்டு வன்னியர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை. பார்க்க தவமாக இருந்தேன். ஏழு நாட்கள் மறியல் போராட்டத்திற்கு பின் தான் சந்திக்க முடிந்தது.
அப்போது, எம்.ஜி.ஆர். உடன் இருந்தவர்கள் அவருக்கு தெரிய வேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்காமலே காலத்தை ஓட்டிவிட்டனர்.
2011 ம் ஆண்டு ஜாதி வாரியாக, கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது வன்னியர்கள் அதிகம் வசிப்பது தெரிய வரும். இது தெரியக் கூடாது என்பதற்காகவே ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ளனர்.
வன்னியர்கள் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளனர்.
வன்னியர்கள் குடித்து அரசுக்கு வருவாயை பெருக்கி தருகின்றனர். வருடத்திற்கு 10 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கின்றது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications