இலங்கை: அத்தியாவசிய பிரிவில் எண்ணெய்-மின்சாரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீராதாரம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைப் பிரிவில் இலங்கை அரசு சேர்த்துள்ளது.

விதிப்படி வேலை என்ற வேலை நிறுத்த அறிவிப்பை சில தொழிற்சங்கங்கள் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை நீர்ப்பாசனம், நீர் மேலாண்மை மற்றும் துறைமுக, விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்சே கூறுகையில், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நீர் வாரியம், துறைமுகப் பொறுப்புக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கத்தினர் விதிப்படி வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அரசுடன் பேச்சுவார்த்தைகளையும் அவர்கள் நிறுத்தி விட்டனர்.

அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்று இலங்கை துறைமுக ஆணைய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளன. இருப்பினும் பிற தொழிற்சங்கங்கள் ஏற்காமல் விதிப்படி வேலையை அறிவித்துள்ளன.

சில முக்கியத் துறைகளை அத்தியாவசியச் சேவைப் பணிகளாக அரசு அறிவிக்க நேரிட்டது என்றார்.

இந்த சமல் ராஜபக்சே, அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+