ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் நுழையும் ஏவிடி டீ
எமிரேட்ஸைச் சேர்ந்த பால்கன் நிறுவனத்துடன் விநியோகஸ்தராக கை கோர்த்துள்ளது ஏவி தாமஸ் நிறுவனம். பால்கன் மூலம் தனது தயாரிப்பை எமிரேட்ஸ் முழுவதும் விநியோகிக்கவுள்ளது.
முதலில் தனது ஏவிடி பிரிமீயம் டீ பிராண்டை, ஏவிடி ரைஹானா என்ற பெயரில் ஏவிடி எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து ஏவிடி குழு தலைமை செயல் அதிகாரி ரவிசங்கர் கூறுகையில், மத்திய கிழக்கில் உள்ள மிகப் பெரிய மார்க்கெட்டில் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு தரமான தேயிலைத் தூளை, குறைந்த விலைக்குத் தர வேண்டும் என்பது எங்களது இலக்காகும்.
எமிரேட்ஸில் எங்களது தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். நல்ல சுவை, அருமையான வாசனை, சிறப்பான கலவை என தரமான டீயாக ஏவிடி ரைஹானாவை வழங்கவுள்ளோம் என்றார்.
ஏவிடி குழுமத்தில் ஒன்றுதான் ஏவி தாமஸ் அன்ட் கம்பெனியாகும். 1925ம் ஆண்டு ஏவிடி குழுமம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.