For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையில் அருணா கொலை கைதி உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கு கைதி சிறையில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார்.

முன்னாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா, ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டில், அவரின் நண்பர் பொன்ராஜுடன் 'வாக்கிங்' சென்றபோது கூலிப்படையினரால் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி அதிபர் எஸ்ஏ ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. மேலும் பாலா, அழகர், வேல்துரை ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இவ்வழக்கில் கைதான டாக் ரவிக்கு மட்டும் தண்டனை வழங்கப்படவில்லை. தன் மீதுள்ள வழக்கை விரைந்து முடிக்கக்கோரி டாக் ரவி இன்று காலை முதல் பாளை சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சிறை அதிகாரிகள் அவரிடம் சமரசம் செய்தும் அவர் சாப்பிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X