கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
வள்ளியூர்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் ரஷ்யா நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் முதன் அணு உலை அடுத்த ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் அணுமி்ன் நிலையங்கள் மீது தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெளியான செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்காவிட்டாலும் அணுமின் உற்பத்திக்கு தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
எனவே ராணுவ வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அணுமின் நிலையத்தை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் மற்றும் பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அணுமின் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications