மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக விஜய் பெரிய பிளான்.. இன்று சட்டசபையில் தீர்மானம்.. முழு விவரம்
சென்னை: காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த தீர்மானத்தை முதல்வர் விஜய் தாக்கல் செய்ய இருக்கிறார். மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் முன்மொழியப்பட உள்ளது . தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடகா அணைகட்டும் பணியை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் அம்மாநில முதல்வராக இருக்கிறார். முதல்வர் டிகே சிவக்குமாரின் கனவு திட்டம் என்றால், பெங்களூரின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வாக மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தான். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ. 715 ஆயிரம் கோடி ஆகும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதற்காக மாநில அரசு திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை சமீபத்தில் மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்திருக்கிறது.

இதன் மீது விரைவாக முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று முதல்வர் டி.கே.சிவக்குமார் பிரதமர் மோடியிடமும், ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர். பட்டேலிடமும் கோரிக்கை வைத்துள்ளார் ஆனால் மேகதாதுவில் அணை கட்டினால் உபரி நீர் கிடைக்காது கிடைக்காமல், காவிரி டெல்டா பாலைவனம் ஆகிவிடும் என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும் இருப்பினும், மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம் என்று முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 177 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து வருகிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். நாங்கள் தண் ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் அவர்களுக்கு நீரை வழங்குவோம். நாம் வாழ வேண்டும். அவர்களும் வாழ வேண்டும். அவர்களின் நலன், நமது நலனையும் பார்த்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும். நாங்கள் தமிழக முதல்வர் விஜய்க்கு என்ன கோரிக்கை வைக்க வேண்டுமோ, அதை முன்வைப்போம். இதில் எந்த அரசியலும் இல்லை.
மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய நீர் ஆணையம் விரைவாக தீர்மானிக்க வேண்டும். மேகதாது அணையில் ஒரு வாளி நீரை கூட பாசனத்துக்கு பயன்படுத்த மாட்டோம். பெங்களூருவில் மக்கள்தொகை அதிகரித்து வரு கிறது. நாங்கள் கிருஷ்ணா ஆற்றில் இருந்து நீரை கொண்டு வர முடியாது. காவிரி ஆறு ஒன்றுதான் எங்கள் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 40 ஆண்டுகளாக மேக தாது திட்டத்தை எதிர்ப்பதை அவர்களுடையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களின் அரசியலில் நாங்கள் தலையிடுவது கிடையாது.
கடந்த 2025ம் ஆண்டு 400 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு திறந்து விட்டோம். ஆனால் அவை அனைத்தும் கடலில் வீணாக கலந்து விட்டது. மேகதாது அணை திட்டத்துக்கு நாங்கள் நிதி உத வியோ அல்லது வேறு ஏதேனும் உதவியோ தமிழக அரசிடம் கேட்கவில்லை.இந்த திட்டத்தால் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. இதனால் மின்சாரத்துறையிலும் கர்நாடகத்துக்கு நன்மை கிடைக்கும். மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட் டுக்கு தான் நன்மை அதிகம். இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் பெங்களூருவில் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
மேகதாது திட்டம் தொடர்பாக நான் முதல்வர் விஜய் உடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன். அனைவரும் ஒரே ஆற்றை, ஒரே தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இருமாநில மக்களின் குடிநீர், பாசன தேவைக்கும், விலங்குகள், கால்நடைகள், தொழிற்சாலை தேவைக்கும் காவிரி நீர் அவசியம். இந்த அணையால் தமிழ் நாட்டுக்கு வறட்சி காலங்களில் தண்ணீர் திறக்க முடியும். மேகதாது திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்த ரவிட்டது. மறுஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தில் இதற்கு எதிராக பேசுகிறார்கள்." இவ்வாறு டிகே சிவகுமார கூறியிருந்தார்.
இந்த சூழலில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நடந்த தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் விஜய், காவிரியில் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடகா அணைகட்டும் பணியை மேற்கொள்ளக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.














Click it and Unblock the Notifications