20 வருடங்களுக்குப் பின் அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா!
டெல்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் முறையாக அரிசியை இறக்குமதி செய்யவுள்ளது.
தொடர் வறட்சி, வெள்ளம் இயற்கையின் சீற்றத்தால் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டு பற்றாக்குறையை ஏற்படுத்தி விட்டதே இதற்குக் காரணம் என மத்திய அரசு கூறுகிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 2009, அக்டோபர் மாதம் முதல் அரிசி சீசன் தொடங்கியது. ஆனால் இந்த சீசனை நாம் கிட்டத்தட்ட 60 லட்சம் டன் பற்றாக்குறையுடன் தொடங்கியுள்ளோம்.
இந்த பற்றாக்குறை கரீப் பருவ காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் ஊகிக்கப்படுகிறது. எனவே இதை சரிக்கட்ட அரிசி இறக்குமதியை நாம் நாட வேண்டியதாயிற்றஉ.
எவ்வளவு அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது, எப்போது இறக்குமதி செய்யப்படும் என்பது குறித்து இப்போது என்னால் கூற முடியாது என்றார் பிரணாப்.