மோகன் மறைவு-புறக்கணித்த நாடாளுமன்றம்!

கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.
ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல் தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர்.
முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் பெரோஸாபாத் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ராஜ் பப்பார் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதே போல ராஜ்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட மோகன்:
ஆனால், மறைந்த முன்னாள் மதுரை எம்.பி. மோகனின் மறைவுக்கு லோக்சபாவில் இன்று இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல நீலகரி நிலச்சரிவு சம்பவத்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் பி.உபேந்திரா உள்ளிட்டோரின் பெயர்கள் லோக்சபா அஞ்சலிக் குறிப்பில் இடம் பெற்றிருந்தது. ஆனால் முன்னாள் எம்.பி. மோகனின் பெயர் இடம் பெறவில்லை.
அதேபோல கேரளாவில் படகு விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. ஆனால் 40க்கும் மேற்பட்டோர் நீலகிரியில் மண் சரிவில் சிக்கி இறந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே இதைச் சுட்டிக் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சியினர் ஏனோ இதுகுறித்து எதுவும் பேசவில்லை.
அடுத்த மாதம் 22ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்க தீவிரவாதியும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பும் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த தீட்டிய சதித் திட்டம், அதை விசாரிக்க விடாமல் அமெரிக்கா போட்டு வரும் தடைகள், திபெத் சீனாவுக்கே சொந்தம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிய கருத்து,
தீவிரவாதிகள்- இந்தித் திரையுலகினர் தொடர்பு, நக்ஸல் விவகாரங்கள், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல் விவகாரம் ஆகியவற்றை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கிளப்பவுள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஆகியவை குறித்தும் தமிழக எம்பிக்கள் பிரச்சனை கிளப்பவுள்ளனர்.
மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த லிபரான் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படலாம்.
அதே போல மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பேச எழுந்துள்ள பிரச்சனை குறித்து லாலு, முலாயம் கட்சியின் எம்பி்க்களுக்கும் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் மூளலாம்.
இந்த சூடான விஷயங்கள் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் உஷ்ணம் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மசோதாக்கள், சட்டத் திருத்தங்களில் இதில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
ஆனால், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை அரசு இந்தக் கூட்டத் தொடரிலாவது கொண்டு வருமா என்பது தெரியவில்லை.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு












Click it and Unblock the Notifications