மோகன் மறைவு-புறக்கணித்த நாடாளுமன்றம்!

கரும்புக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தொடர்பாக எதிர்க் கட்சிகள் பிரச்சனை செய்து கூச்சல், குழப்பம் ஏற்படுத்தியதால் மக்களவையை சபாநாயகர் மீரா குமார் 12 மணி வரை ஒத்தித்தார்.
ஆனால், மீண்டும் அவை மீண்டும் கூடிய போதும் கூச்சல் தொடர்ந்ததால் அவையை நாள் முழுவதற்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார் சபாநாயகர்.
முன்னதாக உத்தரபிரதேச மாநிலம் பெரோஸாபாத் லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ராஜ் பப்பார் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதே போல ராஜ்சபாவில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புறக்கணிக்கப்பட்ட மோகன்:
ஆனால், மறைந்த முன்னாள் மதுரை எம்.பி. மோகனின் மறைவுக்கு லோக்சபாவில் இன்று இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல நீலகரி நிலச்சரிவு சம்பவத்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் பி.உபேந்திரா உள்ளிட்டோரின் பெயர்கள் லோக்சபா அஞ்சலிக் குறிப்பில் இடம் பெற்றிருந்தது. ஆனால் முன்னாள் எம்.பி. மோகனின் பெயர் இடம் பெறவில்லை.
அதேபோல கேரளாவில் படகு விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. ஆனால் 40க்கும் மேற்பட்டோர் நீலகிரியில் மண் சரிவில் சிக்கி இறந்த சம்பவம் தொடர்பாக இரங்கல் தெரிவிக்கப்படவில்லை.
ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே இதைச் சுட்டிக் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சியினர் ஏனோ இதுகுறித்து எதுவும் பேசவில்லை.
அடுத்த மாதம் 22ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்க தீவிரவாதியும் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பும் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த தீட்டிய சதித் திட்டம், அதை விசாரிக்க விடாமல் அமெரிக்கா போட்டு வரும் தடைகள், திபெத் சீனாவுக்கே சொந்தம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிய கருத்து,
தீவிரவாதிகள்- இந்தித் திரையுலகினர் தொடர்பு, நக்ஸல் விவகாரங்கள், விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல் விவகாரம் ஆகியவற்றை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கிளப்பவுள்ளன.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஆகியவை குறித்தும் தமிழக எம்பிக்கள் பிரச்சனை கிளப்பவுள்ளனர்.
மேலும் பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த லிபரான் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படலாம்.
அதே போல மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பேச எழுந்துள்ள பிரச்சனை குறித்து லாலு, முலாயம் கட்சியின் எம்பி்க்களுக்கும் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் மூளலாம்.
இந்த சூடான விஷயங்கள் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் உஷ்ணம் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு மசோதாக்கள், சட்டத் திருத்தங்களில் இதில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.
ஆனால், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான மசோதாவை அரசு இந்தக் கூட்டத் தொடரிலாவது கொண்டு வருமா என்பது தெரியவில்லை.
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
கள்ள நோட்டு கும்பல் கைது.. களத்தூரில் குடிசைகள் தீ வைப்பு.. காமராஜரின் 10 ஆண்டுகால ஆட்சி! -
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு அழைத்த பாஜக நிர்வாகியின் பதவி பறிப்பு.. நயினார் நாகேந்திரன் அதிரடி -
கேரளா.. உள்ளே வரும் பாஜக! புதிய சர்வேயில் காங்கிரஸுக்கு ஷாக்.. அப்போ இடதுசாரிகள் நிலை என்ன? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications