இடைத்தேர்தல்-திமுகவுக்கு புதிய நீதிகட்சி ஆதரவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
நெல்லையில் நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: வ.உ.சி பிறந்த நாளை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். நலிவடைந்த நிலையில் உள்ள சைவ வேளாளர் பிரிவு மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வேளாளர் இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தி.மு.க அணிக்கு ஆதரவு அளிக்கப்படும். கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெற நீதிகட்சி, வ.உ.சி பேரவை உறுப்பினர்கள் வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications