For Daily Alerts
Just In
முதல்வர் கருணாநிதி மகாபலிபுரத்தில் ஓய்வு - வசனம் எழுதுவதற்காக
சென்னை: முதல்வர் கருணாநிதி இன்று காலை பமகாபலிபுரம் சென்று ஓய்வு எடுத்தார். ஆனால் பொன்னர் சங்கர், பெண் சிங்கம் படங்களுக்கான வசனத்தை எழுதுவதற்காக முதல்வர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதி இன்று காலை 7 மணியளவில், மகாபலிபுரம் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் அவர் தங்கினார்.
முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் உடன் சென்றிருந்தார். முதல்வர் வருகையைத் தொடர்ந்து அந்த விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பிரஷாந்த் நடிக்கும் பொன்னர் சங்கர் மற்றும் பெண் சிங்கம் ஆகிய படங்களுக்கான வசனத்தை எழுதுவதற்காக முதல்வர் மகாபலிபுரம் சென்றதாக கூறப்படுகிறது.
Story first published: Friday, November 20, 2009, 17:38 [IST]