சிறார்களுடன் செக்ஸ் வைத்தேன்: டச்சு நபர் வாக்குமூலம்
சிறார்களை ஆபாசமாகப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டு வந்தார் ஹியூம். இதையடுத்து அவரைக் கைது செய்ய இன்டர்போல் சென்னை போலீஸாருக்கு தகவல் அனுப்பியது. இதன் பேரில் ஹியூம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே மகாபலிபுரத்தில் சிறார்களிடம் தவறாக நடந்து கொண்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தலைமறைவானவர் ஆவார். பல ஆண்டுகளாக ஹியூம் சென்னையில் வசித்து வருபவர் ஆவார்.
இந்த நிலையில் போலீஸாரிடம் ஹியூம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
சிறார்களுடன் நான் செக்ஸ் வைத்துக் கொள்வது வழக்கம். இதற்காக அவர்களுக்கு கிப்டுகள் கொடுத்து இழுப்பேன்.
மகாபலிபுரத்தில் நான் அனாதை ஆசிரமம் நடத்திவந்தபோது, எனக்கு அந்தப் பகுதி சிறார்கள் எளிதில் கிடைத்தனர். அவர்களுக்கு வீடியோ கேம்ஸ் போட்டுக் காட்டுவேன். கிப்ட் கொடுப்பேன்.
பல ஆண்டுகளாகவே நான் பெண் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வந்ததால், துணைவி என்று யாரும் இல்லாததால், இளம் சிறார்கள் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.
2002ம் ஆண்டு மகாபலிபுரம் வழக்கிலிருந்து நான் விடுதலையானேன். இதையடுத்து மீண்டும் சிறார் செக்ஸை நான் தொடர ஆரம்பித்தேன்.
இந்த முறை அவர்களை ஆபாசமான கோலத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து அதை எனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார் ஹியூம்.
ஹியூம் கொடுத்த வாக்குமூலத்தை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் இந்த சாட்சியம் உண்மையானதே, யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இதை நான் சொல்லவில்லை என்று கோர்ட்டில் ஹியூம் ஒத்துக் கொண்டால்தான் இது சட்டப்படி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஹாலந்துக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்று ஹியூம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்து. ஆனால் ஹியூமுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டியுள்ளதாக போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஜாமீன் மறுப்பு...
இதற்கிடையே ஜாமீன் கோரி ஹியூம் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை கோர்ட் நேற்று தள்ளுபடி செய்து விட்டது.
விசாரணை தொடக்க கட்டத்தில் உள்ளதால் ஹியூமை விடுவிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற மாஜிஸ்திரேட், ஹியூமின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மீண்டும் 15 நாள் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஹியூம்.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!













Click it and Unblock the Notifications