இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்-சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.

பரமக்குடியில் மீன் பிடித்தொழில் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் செயலாளர் என்.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு காண இலங்கை அரசுடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மீன் பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தல் என்ற பெயரில் மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு கைவிட முன் வரவேண்டும்.

மீனவர்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக டிசம்பர் 2ம் தேதி ராமேஸ்வரத்தில் மக்களை திரட்டி கோரிக்கை மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜனவரி மாதம் இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+