சிறுமியை கற்பழித்த பள்ளி மாணவன் கைது
குளச்சல்: 14 வயது சிறுமியை கற்பழித்த பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிச்சந்தை அருகே சரலை அடுத்த ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் சுமதி. 9ம் வகுப்பு படித்த இவர் தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்தவர் ராஜ் மகன் வி்க்னேஷ். இவர் இப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். விக்னேஷ் வீட்டுக்கு சுமதி அடிக்கடி டிவி பார்க்க செல்வது வழக்கம். கடந்த 6 மாதத்திற்கு முன்பிருந்தே இருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சுமதி கர்ப்பமடைந்தார். சுமதியை விக்னேஷுக்கு திருமணம் செய்ய இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். ஆனால் விக்னேஷின் பெற்றோர் ரூ.3 லட்சம் தந்தால் தான் சுமதியை ஏற்றுக் கொள்வோம் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து சுமதி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீகார், விக்னேஷை நெல்லையில் உள்ள சிறுவர் கோர்ட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.