தூத்துக்குடியில் ரூ. 209 கோடி திட்டங்கள்-ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 209 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
துணை முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வந்தார். எட்டையாபுரம் அருகே உள்ள ராமனூரில் ரூ.2.75 கோடியில் கட்டப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். பின்னர் மேல அரசடியில் இருந்து கன்னிராஜாபுரம் வரையில் ரூ.7.85 கோடியில் 48.75 கி.மீ தூரத்திறகு அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து தூத்துக்குடியில் 3ம் கேட் பகுதியில் ரூ.19 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.18.17 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
பின்னர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த அரசு விழாவில் 1125 சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் உட்பட 7.28 கோடி மதிப்பிலான கடனுதவியையும், ரூ.14.02 கோடியில் 11 ஆயிரத்து 2 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மொத்தம் ரூ. 79.22 கோடியில் 170 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.116 கோடியில் 623 நிறைவேற்றப்பட்ட பணிகளையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.












Click it and Unblock the Notifications