கள்ளநோட்டு கும்பல் கோவில்பட்டியில் கைது
கோவில்பட்டி: நெல்லை, தூத்துக்குடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.73 லட்சத்துக்கான கள்ளநோட்டுகள் பறி்முதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி இளையரேனேந்தல் பைபாஸ் ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படு்ம் படி சுற்றிக்கொண்டிருந்த 3 பேர் சிக்கினர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் பின்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர்.
தொடர் விசாரணையில், மூன்று பேரும் கள்ளநோட்டு கும்பல் என தெரியவந்தது. தூத்துக்குடி டூவிபுரம் துரைராஜ் மகன் குருமூர்த்தி, அவரது உறவினர் நெல்லை ஜங்ஷனை சேர்ந்த அண்ண்மலை மகன் அய்யம்பெருமாள் மற்றும் சங்கரன்கோவில் தேவர்குளத்தை சேர்ந்த விஜயபாண்டி மகன் முருகன் ஆகிய இந்த மூவரும் 50, 100, 500, 1000 என கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
மூன்றுபேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 500ம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 15 என மொத்தம் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவில்பட்டி இளையரேனேந்தல் ரோடு ராதாகிருஷ்ணன் நகர் அருகில் உள்ள வீட்டை சோதனையிட்டபோது அங்கு புத்தம்புதிதாக அச்சடித்து வெட்டப்படாத நிலையில் இருந்த 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் 14ம், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 12ம், 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 14ம், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 2ம் என மொத்தம் 21 ஆயிரத்து 500ஐ பறிமுதல செய்தனர்.
மேலும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய லேசர் பிரிண்டர் மிஷின், ஸ்கேன், பிலிம், அச்சடிக்கும் பேப்பர் முதலியன கைப்பற்றப்பட்டன. கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஈடுபட்ட சிவகாசி சாத்தையாபுரத்தை சேர்ந்த லட்சுமணன், சாரதா நகரை சேர்ந்த சலீம் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications