உத்தப்புரத்தில் கோஷ்டி மோதல்-வீடுகள் சேதம்
மதுரை: ஜாதிக் கலவரத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் மூண்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது உத்தப்புரம். இங்கு தலித் மக்களுக்கும், இன்னொரு ஜாதியினருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஊருக்கு நடுவே சுவர் எழுப்பிய விவகாரம் நாட்டையே உலுக்கியது.
இந்த நிலையில் அங்கு நேற்று திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்புரம் தெற்குத்தெருவைச் சேர்ந்த பொன்னையா அந்தப் பகுதி பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவரான புஷ்பம் என்பவரின் கோஷ்டியைச் சேர்ந்த பாண்டி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் பிரச்சினை வெடித்தது. இது நேற்று மோதலாக மாறியது. இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன.
இதையடுத்து பொன்னையா தரப்பு போலீஸில் புகார் கொடுத்தது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் புஷ்பம் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல புஷ்பம் தரப்பினர் அளித்த புகாரின்பேரில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications