டச்சு நிறுவனத்தை வாங்கியதால் ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருந்தவர்கள் இன்று உற்சாகத்தில் துள்ளியிருப்பார்கள். காரணம் இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 சதவீதம் வரை அப்பங்குகளின் விலை உயர்ந்தன.
டச்சு நாட்டு கெமிக்கல் நிறுவனமான லையாண்டெல் பாஸெல் இன்டஸ்ட்ரீஸின் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதே இந்த மாற்றத்துக்குக் காரணம்.
இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை 12 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது ரிலையன்ஸ்.
ரொக்க டீலாக இதை முடித்துள்ளது ரிலையன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டதும், அதன் பங்கு மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று ரிலையன்ஸ் பங்குகள் ரூ 2162-க்கு கைமாறியது.












Click it and Unblock the Notifications