தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகத்தில் இன்று சில பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் வல்லத்தில் 6 செமீ மழை பெய்தது.
ஓரத்தநாடு, ஜெயங்கொண்டம் தலா 5, கும்பகோணம், திருவிடைமருதூர் தலா 4, நீடாமங்கலம் 3, விருதுநகர், விழுப்புரம், புதுச்சேரி, குடவாசல், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், பவானி, பெரியகுளம் தலா 2, செய்யார், தொழுதூர், உளுந்தூர்ப்பேட்டை, பாபநாசம், தஞ்சை, மன்னார்குடி, திருவாரூர், சீர்காழி, கீரனூர், ராமேஸ்வரம், ஏற்காடு, ஈரோடு, கேத்தி, அரியலூர், ஆண்டிப்பட்டி தலா 1 செமீ மழை பெய்தது.
26ம் தேதி காலை வரையிலான வானிலை முன்னறிவிப்பு..
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.