முதலில் அதிபர் தேர்தல்-ராஜபக்சே உத்தரவு
கொழும்பு: அதிபர் தேர்தலை நடத்துமாறு அதிபர் ராஜபக்சே தனக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையர் தயானந்த திஸநாயக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தேர்தலை நடத்துமாறு முறைப்படி அதிபர் தனக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கை தேர்தல் சட்ட விதிகளின்படி நவம்பர் 30ம் தேதி அதிபர் தேர்தல் குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அன்றுதான் தேர்தல் எப்போது என்ற தேதியும் தெரிய வரும்.
டிசம்பர் மாத மத்தியில் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கலாம்.
முன்னதாக நேற்று காலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார் ராஜபக்சே. அதன் பின்னர்தான் தேர்தல் ஆணையரிடம், தேர்தலை நடத்தலாம் என்று ராஜபக்சே உத்தரவிட்டார்.
இதன் மூலம் இலங்கையில் முதலில் அதிபர் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்தே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications