5வது மாடியிலிருந்து குதித்து முன்னாள் டிஎஸ்பி தற்கொலை
சென்னை: சென்னை மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி, உடல்நலக்குறைவு காரணமாக அலுவலகத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சீர்காழி, கொள்ளிடம் அருகே உள்ள ஆனைக்காரன் சத்திரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவர் தமிழக மின்சார வாரியத்தில் விஜிலென்ஸ் பிரிவில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து, கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், திங்கள்கிழமையன்று (நேற்று) சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு ராமசந்திரன் வந்தார். அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.
காலை 11:30 மணியளவில் திடீரென அலுவலகத்தின் 5வது மாடிக்கு சென்ற ராமச்சந்திரன், லிப்ட் அருகே உள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்துவிட்டார். இதில் ராமச்சந்திரனின் தலை மற்றும் மார்பு எலும்புகள் நொறுங்கின.
அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக ராமசந்திரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராமச்சந்திரனின் உயிர் பிரிந்தது.
சிந்தாதிரிபேட்டை போலீசார், ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட ராமச்சந்திரன், மின்வாரிய விஜிலென்ஸ் ஏ.டி.ஜி.பி., பாலச்சந்தருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'சர்க்கரை, ரத்தகொதிப்பு, சிறுநீரக பிரச்னை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். காலை வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தற்கொலை செய்து கொள்கிறேன். எனது இந்த முடிவுக்கு யாரும் காரணம் கிடையாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராமச்சந்திரனின் மகன் அருண் சரவணன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவரது இரு மகள்களில் ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications