ஹெட்லியுடன் தொடர்பு: பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் 5 பேர் கைது
இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் டென்மார்க்கில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய வழக்கில், பயங்கரவாதிகளான ஹெட்லி மற்றும் ராணாவுடன் தொடர்புடைய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ஹெட்லி, ராணா ஆகிய இருவரையும் அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்களுக்கு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஏ தொய்பாவுடன் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் ஐந்து பேர் ஹெட்லியுடன் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்து அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் ஹெட்லியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் அவர்களை காட்டிக்கொடுத்ததாகவும், அவர்களை மேலும் விசாரித்தால் பல தகவல்கள் வெளியாகும் என்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புலனாய்பு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல், பணியில் உள்ள லெட்யூனென்ட் கர்னல்கள் இருவரும் அடக்கம்.
ஆனால், ஹெட்லி மற்றும் ராணாவுடன் தொடர்பு உள்ளதாக, சந்தேகத்தின் பேரில் ஒரேயொரு ஓய்வு பெற்ற மேஜர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார். பணியில் இருக்கும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் அவர் கூறினார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications