ஒரு பக்கம் தாக்குதல் - மறுபக்கம் பிரசவம் - பிறந்த நாள் கொண்டாடும் கோலி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை காமா மருத்துவமனை வளாகத்தில் தீவிரவாதிகள் வெறித் தனமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது பிறந்த குழந்தை இன்று தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

அந்தக் குழந்தையின் பெயர் தேஜஸ்வினி. ஆனால் அதை எல்லோரும் கூப்பிடுவது கோலி எனறுதான். கோலி என்றால் தோட்டா என்று பொருளாம். துப்பாக்கிச் சத்தத்திற்கு மத்தியில் பிறந்ததால் கோலி என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் அனைவரும்.

இதுகுறித்து தேஜஸ்வினியின் தந்தை ஷாமு செளஹான் கூறுகையில், காமா மருத்துவமனையில் எனது மனைவி பிரசவ வலி ஏற்பட்டு அறுவைச் சிகிச்ச அறையில் கிடத்தப்பட்டிருந்தார்.

அப்போதுதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எங்களது அறைக்குச் சில அடிகள் தொலைவில்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நான் அவர்களை ஜன்னல் வழியாக தெளிவாகப் பார்த்தேன். சிதறிக் கிடந்தன உடல்கள். அனைவரும் பீதியுடன் பதுங்கியிருந்தோம்.

இந்த அமளிக்கு மத்தியிலும் எனது மனைவிக்குப் பிரசவம் நடந்தது. தேஜஸ்வினி பிறந்தாள் என்றார் இன்னும் அந்த அதிர்ச்சி நீங்காத முகத்துடன்.

தேஜஸ்வினியை யாருமே அந்தப் பெயரில் அழைக்க மாட்டேன் என்கிறார்களாம். கோலி என்றுதான் செல்லமாக கூப்பிடுகின்றனர். ஷாமுவும், அவரது மனைவியும் மட்டும்தான் தேஜஸ்வினி என்று கூறுகிறார்களாம். தேஜஸ்வினியின் அண்ணன் (வயது 5) சசிகாந்த் கூட கோலி என்றுதான் கூப்பிடுகிறானாம்.

முதல் பிறந்த நாள் என்றாலும், மும்பைத் தாக்குதலின் சோகம் இன்னும் ஷாமு குடும்பத்தினரிடமிருந்து விலகவில்லை. எனவே இந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+