ராஜீவ் கொலை வழக்கு- நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், நளினி உள்ளிட்ட 41 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தது. அப்போது தலைமறைவு குற்றவாளிகள் என்று பிரபாகரனும், பொட்டு அம்மானும் அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.

மீதமிருந்த 26 பேர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டு 1998ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் தொடர்பாக மேல் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், பல்நோக்கு புலனாய்வு குழுவிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தற்போது இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இலங்கையில் போர் முடிவடைந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரபாரகன், பொட்டு அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டு விட்டதாகவும் அது கூறியுள்ளது. அதேசமயம், இதுதொடர்பான இந்தியா கோரியருந்த மரணச் சான்றிதழை இதுவரை இலங்கை தரவில்லை.

இந்த நிலையில், நாளை பிரபாகரன், பொட்டு மீதான ராஜீவ் கொலை வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+